Wednesday, February 8, 2017

பணம் இருந்தா பத்து ரூவா குடு

நெடுநெடுவென வளர்ந்திருக்கும், பஞ்சாயத்துபடிகளில் மெளனமாக அமர்ந்திருக்கும், சிலசமயம் கூச்சல் இட்டபடி தெருவில் ஓடும், வலிய சென்று வண்டிகளில் பாரம் இறக்கிவிட்டு விடுவிடுவென நடந்து வந்து அதே படிகளில் அமர்ந்து கொள்ளும், சில சமயம் என்னை பார்த்து சிரிக்கும், 'சொல்லுங்கள் ராஜாவே', என்றால் வெட்கப்பட்டு தலை குனிந்துகொள்ளும்.

   மாதத்தில் ஏதாவது ஒரு நாள் தலையை தாழ்த்தியபடி "பத்து ரூபா கொடு", என்று வரும். "ஏன் சாப்பிடலயா?", என்றால் எவனுமே தர மாட்டேங்கிறான் என்று சொல்லும். "எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே?" என்றால் "பத்து ரூபா கொடு" என்று மீண்டும் தொடங்கும். காசை வாங்கியவுடன் வேகமாக கடைக்கு சென்றுவிடும்,  ஏதாவது சாப்பிட வாங்கி அதே படிகளில் அமர்ந்து கொள்ளும்.

 முழு சுயநலம் கொண்டுதான் அவரிடம் நட்பாக இருக்கிறேன், என்னையும் அந்த படிகளில் காலம் அமர்த்த கூடும், அப்போது உங்களுக்கு என்னைப் பற்றி யாராவது இப்படி எழுதிக் கொண்டிருப்பார்கள்... இல்லையா?     

No comments:

Post a Comment