Wednesday, March 30, 2016

வறுமையை இதைவிட வலிமையாய் சொல்ல முடியுமா?

வறுமையை இதைவிட வலிமையாய் சொல்லி விட முடியமா என்ன? முகத்தில் பலமாக அறைகிறது இந்த கவிதை...  

"அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்."
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸ¤க்காய்
அம்மாவும்
அப்பாவும்!



கலாப்ரியா.

No comments:

Post a Comment