Tuesday, February 9, 2016

பள்ளிகள் ஏன் இனியும் விண்ணப்பம் தர பெற்றோரை தெருவில் நிறுத்த வேண்டும்?

நேற்று மதியத்தில் இருந்து. என்னோட ஆபீஸ் பக்கத்துல ரோட்டுல ஒரு பெரிய "சபத கியூ" நின்னிட்டிருக்கு. ராத்திரியெல்லாம் கொட்டும் பனியில், கிலோமீட்டர் அளவுக்கு தெருவுல படுத்திட்டிருக்காங்க. என்னடான்னு விசாரிச்சா, பக்கதுல இருக்குற DAV school-ல இன்னிக்கு அட்மிஷன் ஃபாம் குடுக்குறாங்களாமாம். !
தெரியாமல் தான் கேட்க்குறேன், 'ஈ கவர்ன்மென்ட், டிஜிட்டல் இந்தியான்னு, அரசாங்கமே அடுத்த தலைமுறை தொழில் நுட்பத்துக்கு மாறிட்டிருக்கு. இந்த பள்ளிகள் ஒவ்வொரு வருடமும் அப்பிளிகேன் குடுக்குறோம்ன்னு, இப்படி பெற்றோர்களை தெருவுல படுக்க வெச்சி, அசிங்கபடுத்துறதுக்கு, ஆன் லைன்ல கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தால் என்ன குடியா முழுகிடபோகுது?
இதெல்லாம் ரெம்பவே சில்லரைதனமான மார்க்கெட்டிங்!
இதோ பாருங்க, 'என்னோடா ஸ்கூல் வாசலில தேவுடு காக்குறாங்க'ன்னு அடுத்த நாள் பேப்பர்ல "பே நியூஸ்" வரச்செய்வதற்கான ஏற்பாடு. இந்த சின்ன விசயம் கூட உணர்ந்து கொள்ள முடியாத பள்ளிகளால், எப்படி கல்வியை சேவையாக, கொடுக்கமுடியும்?
இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், சிறு தேல்வியை கூட தங்கமுடியாது, தற்கொலை செய்து கொள்ளும் ஏட்டு சுரைக்காய்யாக தான் வெளியே வருவார்களே தவிர, பின்னாளில் கண்டிப்பாக தன்னம்பிக்கையுள்ள இளைய தலைமுறையாக உருவாகாது. இந்த பெற்றோரை நினைத்தால் தான் பாவமா இருக்கு.
தமிழ் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக கஸ்மரை தெருவுல படுக்கவச்சது இந்த கழிச்சடைகளாக தான் இருக்கும்.

முகநூல் பக்கத்திலிருந்து ராஜேஷ்குமார்

No comments:

Post a Comment