Tuesday, February 9, 2016

"மௌனம்" அல்லது "கடவுளின் குரல்"

என் தம்பி ஜெகதீஷ் எழுதிய "மௌனம்" அல்லது "கடவுளின் குரல்" 


"மின்விசிறியை அணைத்துவிட்டு, ஜன்னலையும் அதையொட்டி அடிக்கப்பட்ட கொசு வலையையும் கடந்து அறையை நிரப்பும் மெலிதான வெளிச்சத்தில் அமைதியாய் அமர்ந்து சுவர் கடிகாரத்தின் ச்சிக்..ச்சிக்.. என்ற சத்தத்தை கவனிக்க துவங்குகையில் ச்சிக்..ச்சிக்..கிற்கு துணையாக அருகாமையில் எங்கெங்கோ குருவிகளும், சேவல்களும் சேர்ந்துகொண்டன.

சூடான காஃபி டம்ளர் கொண்டு கைகளுக்கு ஒத்தடம் வைத்துக் கொண்டே இவற்றையெல்லாம் ரசிக்க. புன்னகைத்தேன்... இப்பொழுது ச்சிக்..ச்சிக்.. நன்றாக சத்தமாக கேட்கிறது யாரோ என்னோடு மட்டும் பேசி மகிழ எனக்கே எனக்காய் கண்டுபிடித்த மொழி போல.

கொஞ்சமாய் வியர்த்திருந்தது ஜன்னல் வழி வரும் காற்று சில்லென்றாக்கியது. ச்சிக்..ச்சிக்.. இன்னும் கேட்கிறது பின்னணியில் குருவிகளும், சேவலும்...

மெல்ல குடிக்க துவங்குகிறேன் காஃபியை. இன்றைய மாலைநேர காஃபிடைம் எவ்வளவு பேரழகாய் இருக்கிறது பாருங்கள்..!


இவனை ட்விட்டரில் பின் தொடர, கீழே உள்ள பெயரை click செய்யுங்கள்  

Jagadeesh

No comments:

Post a Comment