Wednesday, January 13, 2016

கோ வசந்தகுமாரன் கவிதைகள்

* அரிவாள் மீதேறி
ஆடு குடித்து
சந்நதம் கொண்டு ஆடிய
சாமியாடிக்கு
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியை கண்டதும்
மலையேறியது சாமி
---------------------------------------
* எல்லோரும் என்னை
கடந்து போகிறார்கள்
என்னால்தான் முடியவில்லை
என்னை கடக்க
-----------------------------------------
* கனவில் இறந்தேன்
விழிக்கவே மனமில்லை
விடிந்த பிறகும்
-------------------------------------------
* எல்லோர் மனதிலும்
அசைந்து கொண்டிருகுகிறது
துக்கம் விசாரிக்கும் போது
அணிந்து கொள்ள
துயரம் தீட்டப்பட்ட
ஒரு முகமூடி
-------------------------------------------------

No comments:

Post a Comment